'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணின் நெருங்கிய நண்பர் சரத், நார்த்ஸ்டார் என்டர்டையின்மென்ட் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் படத்தில் பவன் கல்யாண் நாயகனாக நடித்து வருகின்றார். இயக்குநர் பாபி இயக்கும் இப்படம் பவன் கல்யாண் நடிப்பில் வெற்றி பெற்ற கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் புனேவில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள அலுமினிய தொழிற்சாலையில் இன்று(ஜூலை 29) முதல் துவங்கியுள்ளது. அணல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் இங்கு படமாக்கப்படவுள்ளதாம். இதில் நடிகர் பவன் கல்யாண் பங்கேற்கவுள்ளார். பவன் கல்யாண் நடிப்பில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். படத்தின் நாயகியாக ஒப்பந்தமான நடிகை அனிஷா அம்ரோஸ் திடீரென விலகியதற்கு காரணம் எதுவும் கூறப்படாத நிலையில் இப்படத்தின் நயாகியக்கான தேர்வும் தற்போது நடைபெற்று வருகின்றதாம்.