விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
டோலிவுட்டில் ரே, பிள்ளை நிவூ லெனி ஜீவிதம் போன்ற படங்களில் நாயகனாக நடித்த நடிகர் சாய் தரன் தேஜ் தற்போது இயக்குநர் ஹரீஷ் சங்கர் இயக்கும் சுப்ரமணியம் பார் சேல் படத்தில் நடிக்கின்றார். எஸ்.வி.சி பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜு தாயரிக்கும் இப்படத்தில் சாய் தரன் தேஜிற்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடிக்கின்றார். இப்படம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பின்னர் சாய் தரன் டோலிவுட்டில் பட்டாஸ் எனும் வெற்றிப் படம் கொடுத்த இயக்குநர் அணில் ரவிபுடி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் கல்யாண் ராம் மற்றும் நடிகை ஸ்ருதி சோதி நடிப்பில் வெளிவந்த பட்டாஸ் திரைப்படம் டோலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்து. அப்படத்தின் இயக்குநர் அணில் ரவிபுடி கூறிய கதை நடிகர் சாய் தரன் தேஜிற்கு பிடித்துப் போனதால் அதில் நடிக்க சாய் தரன் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.தயாரிப்பாளர் ராஜு இத்தகவலை உறுதி செய்துள்ளார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.