‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நடிகர் விமல், தனது உறவினரும் மருத்துவக் கல்லூரி மாணவியுமான காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பசங்க படத்தி்ன் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் விமல். மணப்பாறையை சேர்ந்த விமல் பசங்க படத்தைத் தொடர்ந்து அவர் நடித்த களவாணி படமும் சூப்பர் ஹிட். தற்போது எத்தன் படத்தில் நடித்து வரும் விமல், தனது தந்தை வழி உறவினரான அட்சயா என்ற பெண்ணை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தார். திண்டுக்கல்லை சேர்ந்த அட்சயா சென்னையில் உள்ள தனியார் மரு்ததுவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது காதலுக்கு அட்சயாவின் வீட்டில் எதிர்ப்பு வந்தது. டாக்டர் மாப்பிள்ளைக்குத்தான் அட்சயாவை திருமணம் செய்து வைப்போம் என கூறிய பெற்றோர், அதற்காக டாக்டர் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ என எண்ணிய காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
தற்போது கும்பகோணத்தில் எத்தன் படப்பிடிப்பில் இருக்கும் விமலை சந்திப்பதற்காக மாணவி அட்சயா கும்பகோணம் சென்றார். பின்னர் இருவரும் சுவாமிமலை சென்றனர். அங்கு முருகன் கோயிலில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு விமலின் மனைவியாக மாணவி அட்சயா சென்னை சென்று விட்டார். நடிகர் விமல் கும்பகோணத்தில் தங்கியிருந்து சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.
ரகசிய திருமணம் குறி்தது நடிகர் விமல் அளித்துள்ள பேட்டியில், அட்சயா எனக்கு மாமா மகள் முறைதான். சிறு வயதில் இருந்தே இருவரும் நட்பாக பழகினோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். ஆனால் எங்கள் காதலை அட்சயாவின் வீட்டில் எதிர்த்தனர். அவளை ஒரு டாக்டர் மாப்பிள்ளைக்குத்தான் கொடுப்போம் என்பதில் உறுதியாக இருந்தார்கள். சினிமாவில் நான் நல்ல நிலைமையில்தான் இருக்கிறேன். எதிர்காலத்தில் முன்னணி நடிகராக வருவேன். உங்கள் மகளை நல்லபடியாக வைத்து காப்பாற்றுவேன் என்று மாமனார் குடும்பத்தினருடன் போராடினேன். ஆனால் அவர்கள் ``சினிமாக்காரனுக்கு எங்கள் பெண்ணை கொடுக்க மாட்டோம் என்று கூறி விட்டார்கள். அதோடு நிற்காமல், பிரியதர்சினிக்கு மிக தீவிரமாக டாக்டர் மாப்பிள்ளையை தேட ஆரம்பித்தார்கள். எனவேதான் நாங்கள் ரகசிய திருமணம் செய்து கொண்டோம். இரண்டு பேர் குடும்பத்து பெரியவர்கள் சம்மதத்துடன், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.