சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார். வில்லன் கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றாலும் மிகச் சிறந்த ஆன்மீகவாதி, பக்திமான், வாழ்க்கையில் சீரிய நெறிமுறைகளை கடைப்பிடித்தவர். அவர் பல ஆண்டுகளாக ராசியான வைர மோதிரம் ஒன்றை அணிந்து வந்தார். எந்த சூழ்நிலையிலும் அதை அவர் கழற்றுவதே இல்லை. அவரது மரணத்திற்கு பிறகு அந்த மோதிரத்தை அவரது குடும்பத்தினர் பாதுகாத்து வந்தனர். இப்போது அந்த மோதிரம் உள்பட நம்பியார் வீட்டில் இருந்த 5 ஜோடி வைர கம்மல்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு அறிந்த யாரோ அதனை திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளனர்.
கோபாலபுரம் பங்களா
நடிகர் நம்பியார் தனது கடைசிகாலம் வரை தனது கோபாலபுரம் பங்களாவில் வசித்து வந்தார். அதன் பிறகு அவரது மகன் சுகுமாறன் நம்பியார் அந்த பங்களாவில் வசித்தார். அவரது மறைவுக்கு பிறகு அந்த பங்களா இடிக்கப்பட்டு அங்கு பல அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அதற்கு அருகில் நம்பியாருக்கு சொந்தமான கெஸ்ட் அவுசில் அவரது மகள் வசித்து வருகிறார். அங்குதான் இந்த கொள்ளை நடந்துள்ளது.
வேலைக்காரி மீது சந்தேகம்
அந்த வீட்டில் பல ஆண்டுகள் வேலைபார்த்து வந்த வேலைக்காரி கடந்த 10 நாட்களுக்கு முன் வேலையை விட்டு நின்று விட்டார். அவருக்கு வைர நகைகள் பற்றித் தெரியும், அவரோ, அவர் தகவல் கொடுத்தோ நகைகள் திருட்டு போயிருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
புகார் இல்லை. நகைகள் திருட்டு போனதாக போலீசுக்கு தகவல் வந்தாலும் எழுத்துபூர்வமான புகார் எதையும் யாரும் கொடுக்கவில்லை. என்றாலும் ராயப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.