கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் | தமிழர்கள் ரசனை குறைந்தவர்களா? இயக்குனர் ஞானராஜசேகரன் | அன்னை இல்லத்தில் டும்டும் : ராம்குமார் மகன் தர்ஷனுக்கு திருமணம் | திருமண வேலைகளுக்கு இடையே டப்பிங்கை முடித்த நாகார்ஜுனா | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் தீபிகா படுகோனே | அனுஷ்கா போஸ்டரால் ஏற்பட்ட விபத்துகள் : இயக்குனர் ஓபன் டாக் |
புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் 1964ம் ஆண்டு வெளிவந்த படம் காதலிக்க நேரமில்லை. ஈஸ்ட்மென் கலரில் வந்த முதல் தமிழ் படம். ரவிசந்திரன், காஞ்சனா, வி.எஸ்.ராகவன், சச்சு ஆகியோர் இதில் அறிமுகமானார்கள். இவர்களைத் தவிர ராஜஸ்ரீ, பாலையா, முத்துராமன், நாகேஷ் ஆகியோரும் நடித்திருந்தார்கள்.
தமிழ் சினிமாவிற்கு பல விதங்களில் முன்னோடியாக அமைந்த இந்தப் படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்தார். காமராஜர் அரங்கில் காதலிக்க நேரமில்லை படத்தின் 50 வது ஆண்டு விழா நடந்தது.
இதில் படத்தில் நடித்த ராஜஸ்ரீ, காஞ்சனா, சச்சு ஆகியோர் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது. காதலிக்க நேரமில்லை படத்தில் பாடிய ஜேசுதாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி, நடித்த வி.எஸ்.ராகவன், வசனம் எழுதிய கோபு, இணை இயக்குனராக இருந்த சி.வி.ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நாகேசுக்கு பதிலாக அவரது மகன் ஆனந்த்பாபு, பேரன் கஜேஷ், ரவிச்சந்திரனுக்கு பதிலாக அவரது மனைவி விமலா, சீர்காழி கோவிந்தராஜன்கு பதில் சீர்காழி சிவ சிதம்பரம், பாலையா மகன், பி.வி.ஸ்ரீனிவாஸ் மகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜேசுதாஸ், "விஸ்வநாதன் வேலை வேண்டும்..." பாடலை சில வரிகள் பாடி பழைய நினைவுகளில் மூழ்கினார். "தங்கை வேடங்களில் நடித்து கொண்டிருந்தவளை ஹீரோயினாக்கி வாழ்க்கை கொடுத்தவர் ஸ்ரீதர்" என்று ராஜஸ்ரீ நெகிழ்ந்தார். "விமான பணிப்பெண்ணாக பறந்து கொண்டிருந்தவரை அதை விட உயரத்தில் உன்னை பறக்க விடுகிறேன்" என்று சினிமாவுக்கு ஸ்ரீதர் அழைத்து வந்த கதையை சொன்னார் காஞ்சனா. "ஒரு காட்சியை படமாக்குவதற்கு முன் அதனை மனதில் படமாக்கி வைத்துக்கொள் வெற்றிகரமான இயக்குனராக வருவாய்" என்று ஸ்ரீதர் அறிவுரை சொன்னதை நினைவூட்டினார் சி.வி.ராஜேந்திரன்.
விழாவில் இயக்குனர்கள் இசை அமைப்பாளர் வித்யாசாகர் உள்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.