தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தொலைக்காட்சி தொடர்களை விரும்பி பார்க்கிறவர்களுக்கு கே.எஸ்.ஜி வெங்கடேஷ் நல்ல அறிமுகமானவர். பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகன். அவர் இயக்கிய அத்தைமடி மெத்தையடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்தவர். போதிய வாய்ப்புகள் இன்றி சின்னத்திரைக்கு வந்தார்.
தற்போது வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் சதுரங்க வேட்டை படத்தில் கிரானைட் அதிபராக நடித்திருந்தார். அவரது நடிப்பை எல்லோரும் வெகுவாக பாராட்டுகிறார்கள். வாய்ப்புகளும் வருகிறது. அதனால் இனி சினிமாவில் தொடர்ந்து நடிக்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: அப்பாதான் என்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் அதன் பிறகு தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் 25 படங்கள் வரை நடித்தேன். அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்து விட்டேன். 20 சீரியல்களுக்கு மேல் சுமார் 2 ஆயிரத்து 500 எபிசோட்களில் நடித்திருக்கிறேன்.
சதுரங்க வேட்டை வாய்ப்பு கிடைத்தது. ஒரு படம்தானே என்று ஒரு மாறுதலுக்காக நடித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இனி தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். வில்லன் கேரக்டர்கள் அதிகமாக வருகிறது. வில்லனாக நடிப்பதில் எனக்கு பிரச்னை எதுவும் இல்லை, நடிக்க தயார் என்கிறார் வெங்கடேஷ்.