ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
தொலைக்காட்சி தொடர்களை விரும்பி பார்க்கிறவர்களுக்கு கே.எஸ்.ஜி வெங்கடேஷ் நல்ல அறிமுகமானவர். பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகன். அவர் இயக்கிய அத்தைமடி மெத்தையடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்தவர். போதிய வாய்ப்புகள் இன்றி சின்னத்திரைக்கு வந்தார்.
தற்போது வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் சதுரங்க வேட்டை படத்தில் கிரானைட் அதிபராக நடித்திருந்தார். அவரது நடிப்பை எல்லோரும் வெகுவாக பாராட்டுகிறார்கள். வாய்ப்புகளும் வருகிறது. அதனால் இனி சினிமாவில் தொடர்ந்து நடிக்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: அப்பாதான் என்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் அதன் பிறகு தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் 25 படங்கள் வரை நடித்தேன். அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்து விட்டேன். 20 சீரியல்களுக்கு மேல் சுமார் 2 ஆயிரத்து 500 எபிசோட்களில் நடித்திருக்கிறேன்.
சதுரங்க வேட்டை வாய்ப்பு கிடைத்தது. ஒரு படம்தானே என்று ஒரு மாறுதலுக்காக நடித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இனி தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். வில்லன் கேரக்டர்கள் அதிகமாக வருகிறது. வில்லனாக நடிப்பதில் எனக்கு பிரச்னை எதுவும் இல்லை, நடிக்க தயார் என்கிறார் வெங்கடேஷ்.