நான் வாடகை வீட்டில் இருக்கிறேன் : ரவி மோகன் உருக்கம் | பழம்பெரும் நடிகர் சீனிவாசன் காலமானார் | 'பேமிலி' படங்களுக்கு மாறுகிறதா தமிழ் சினிமா? | 'முருகர்' பற்றிய படத்தில் நடிக்கப் போகிறாரா ஜுனியர் என்டிஆர்? | 3 பிஎச்கே : ஒரே மேடையில் வாழ்த்திய 'டிரென்டிங்' இளம் இயக்குனர்கள் | இரு மொழிப் படங்கள்: உஷார் ஆவார்களா தமிழ் நடிகர்கள் ? | டிஜிட்டல் தரத்தில் 'உம்ராவ் ஜான்' - நாளை ரீரிலீஸ் | கார்த்தி படத்தில் நானி? | சிரஞ்சீவி 157வது படத்தில் வெங்கடேஷ்? | தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் எச்.வினோத்! |
தொலைக்காட்சி தொடர்களை விரும்பி பார்க்கிறவர்களுக்கு கே.எஸ்.ஜி வெங்கடேஷ் நல்ல அறிமுகமானவர். பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகன். அவர் இயக்கிய அத்தைமடி மெத்தையடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்தவர். போதிய வாய்ப்புகள் இன்றி சின்னத்திரைக்கு வந்தார்.
தற்போது வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் சதுரங்க வேட்டை படத்தில் கிரானைட் அதிபராக நடித்திருந்தார். அவரது நடிப்பை எல்லோரும் வெகுவாக பாராட்டுகிறார்கள். வாய்ப்புகளும் வருகிறது. அதனால் இனி சினிமாவில் தொடர்ந்து நடிக்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: அப்பாதான் என்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் அதன் பிறகு தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் 25 படங்கள் வரை நடித்தேன். அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்து விட்டேன். 20 சீரியல்களுக்கு மேல் சுமார் 2 ஆயிரத்து 500 எபிசோட்களில் நடித்திருக்கிறேன்.
சதுரங்க வேட்டை வாய்ப்பு கிடைத்தது. ஒரு படம்தானே என்று ஒரு மாறுதலுக்காக நடித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இனி தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். வில்லன் கேரக்டர்கள் அதிகமாக வருகிறது. வில்லனாக நடிப்பதில் எனக்கு பிரச்னை எதுவும் இல்லை, நடிக்க தயார் என்கிறார் வெங்கடேஷ்.