ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் படம் ரஜினி முருகன். இதன் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகராகவும், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் உள்ளூர் வெள்ளை வேட்டி பார்ட்டியாகவும் நடிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ஹீரோயின் கேரக்டருக்கு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. குடிதண்ணீர் பிடிக்கும் இடத்திலிருந்து சினிமா தியேட்டர் கவுண்டர் வரைக்கும் யாரிடமும் சண்டைக்கு நிற்கும் வாயாடி பெண் கேரக்டர். சுமாரான அழகு கொண்ட லோக்கல் பெண் கேரக்டர். எதற்கெடுத்தாலும் சேலையை வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு திரிகிற கேரக்டர். கெட்ட வார்த்தைகளை சரளமாக அள்ளிவிடுகிற பெண். இந்த கேரக்டரில் நடிக்க ஹீரோயின் தேடிக் கொண்டிருந்தவர்கள், இப்போது ஜிகிர்தண்டாவில் சேலை திருடும் பெண்ணாக நடிதிருந்த லட்சுமிமேனனைப் பார்த்துவிட்டு அவரையே ஹீரோயினாக முடிவு செய்து விட்டார்கள்.
இதற்கு லட்சுமிமேனனும் ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கிறது. இதில் சிவாகர்த்திகேயன், சூரி, லட்சுமிமேனன் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். லட்சுமிமேனன் சிவகார்த்திகேயனுடன் இணையும் முதல் படம் இது.