Advertisement

சிறப்புச்செய்திகள்

மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சதுரங்க வேட்டையில் வென்றது எப்படி..? இயக்குநர் வினோத் பேட்டி!

03 ஆக, 2014 - 05:50 IST
எழுத்தின் அளவு:

மக்களுக்கான சினிமா எக்காலத்திலும் பேசப்படாமல் போனதில்லை. அந்த வகையில் நிகழ்காலத்தின் கண்ணாடியாக நாட்டு நடப்புகளை வெளிச்சம் போட்டு காட்டி, வெற்றிவாகை சூடியுள்ளது சதுரங்க வேட்டை. முதல்பட இயக்கத்திலே சிகரம் தொட்ட இயக்குனர்களின் வரிசையில் இப்படத்தின் இயக்குனர் வினோத் சேர்ந்துள்ளார். வெற்றிப்படத்தை கொடுத்த மகிழ்ச்சியில் இருந்த வினோத்திடம் ஒரு நேர்காணல்...


* லட்சியம் நிறைவேறி விட்டதாக தெரிகிறதே?


பல பேட்டிகளை நானும் படித்திருக்கிறேன். வெற்றிகளை ருசித்தவர்கள், சினிமா தான் எனது கனவு லட்சியம் என சொல்வார்கள். நான் அப்படி இல்லை. சின்ன வயதிலிருந்தே சினிமா ஆசை எனக்கு இல்லை. அது கனவாகவும், லட்சியமாகவும் இல்லை. படித்து வெளிநாட்டில் சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற பெரும் சிந்தனை தான் இருந்தது. விவசாயத்தின் மீதும் கொஞ்சம் ஆர்வம் இருந்தது.


* சினிமாவுக்கு வந்தது எப்படி?


வேலூர் அருகே சின்னப்பள்ளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவன் நான். அப்பா கூட்டுறவு வங்கியில் வேலை செய்கிறார். அம்மா, தங்கை என ஒரு நடுத்தர குடும்பம். கஷ்டங்கள் தெரிந்தவன். சென்னையில் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் படித்தேன். நான்கு, ஐந்து ஆண்டுகள் சில இடங்களில் வேலை பார்த்தேன். அவை பிடித்த வேலையாகவும் இல்லை. கிடைத்த வேலையை ஒழுங்காகவும் பார்த்ததில்லை. அப்போது தான் மாற்று சிந்தனையாக சினிமா மீது ஒரு விருப்பம் வந்தது. வேலையை விட்டு விட்டு சினிமா பக்கம் தாவினேன்.


* சினிமாவை எங்கு கற்றீர்கள்?


முதலில் இயக்குனர் பார்த்திபனோடு சேர்ந்தாலும், ஒரு விஷயத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதை குக்கூ பட இயக்குனர் ராஜூ முருகனிடம் கற்றேன். கற்ற விஷயத்தை எப்படி படமாக்குவது என்பதை இயக்குனர் விஜய்மில்டனிடம் தெரிந்து கொண்டேன். இவர்கள் இருவர் தான் எனக்கு சினிமா கற்றுத்தந்தவர்கள்.


* சதுரங்க வேட்டையின் கதை எப்படி உருவானது?


இது என்னோட கதை அல்ல. ஜனங்களின் கதை. அன்றாடம் ஏதாவது நிலைகளில் ஏமாற்றப்படும் மக்களின் நிலை குறித்து பத்திரிகைகளில் நான் படித்ததை தான் கதைக்களமாக மாற்றினேன். ஜனங்களின் கதை ஒரு போதும் பேசப்படாமல் போனது இல்லை. இந்த கதைகளை யாராலும் புறக்கணிக்கவோ, நிராகரிக்கவோ முடியாது. மக்களின் வாழ்வியல் மொழியில் கதைகளை பேசும் போது அது பலமாக இருக்கும்.




* முதல்படம் என்ற அச்சம் இருந்ததா?


இல்லாமலா இருக்கும். படம் ரிலீஸ் ஆவது வரை மனம் திக்... திக்... ன்னு தான் இருந்தது. முதலில் படத்தை பார்த்த லிங்குசாமி, மக்களின் கதை சொல்லும் இந்த படம், எல்லா இடங்களிலும் பேசப்படும் என சொல்லி தைரியப்படுத்தினார். அது போல் படம் இப்போது பேசப்படுகிறது.


* 'ரிஸ்க்' எடுத்த காட்சிகள்?


படத்திலேயே வரும் ஒரு நீளமான வசனத்திற்காக 60 டேக் எடுத்தேன். அது போல் கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக தொடர்ச்சியா மூன்று இரவுகள் மொத்த யூனிட்டே தூக்கத்தை தொலைத்தது, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். 'ரிஸ்க்' பின்னால் தானே 'சக்ஸ்சஸ்' இருக்கும்.


* இக்கதையும் வேறு மொழிப்படத்தின் தழுவலா?


இது நூறு சதவீதம் எனது படைப்பு. வேறு மொழிப்படங்களை நான் விரும்பி பார்ப்பது இல்லை. தமிழில் ஜி.நாகராஜனின் எழுத்துக்கள் பிடிக்கும். அதனால் எனது படைப்புகளிலும் அது போல் கதை சொல்லும் விதத்தில் ஒரு தாக்கம் இருக்கும்.


* அடுத்த படத்தை பெரிய பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாமா?


படம் என்றாலே பெரிய பட்ஜெட்டிற்கு தான் மதிப்பு. பெரிய நட்சத்திரங்களை வைத்து நாங்கள் இயக்க விரும்பினாலும், அவர்களின் விருப்பம் வேறாக இருக்கும். அதனால் எனது இயக்கத்திற்கு ஏற்றாற்போல் அடுத்த படமும் பெரிய பட்ஜெட்டாக இருக்கும்.


* முதல் படத்தை வெற்றிப்படமாக கொடுத்த பல இயக்குனர்களை காணவில்லையே?


இந்த விஷயத்தில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன். அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது, என்பதற்காக அடுத்த படத்திற்கான பணிகளில் அதிக முனைப்புடன் செயல்படுவேன். அந்த படமும் இது போல் மக்களுக்கான விஷயங்களை பேசும் படமாகவே இருக்கும்.


* யார் ரசிகர் நீங்கள்? தமிழ் சினிமாவின் போக்கு பற்றி?


ரசிப்புத்தன்மை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுகிறது. சிறு வயதில் ரஜினி, அதன் பின் கமல், இப்போது யார் நன்றாக நடித்தாலும் அவர்களை ரசிக்கிறேன். தமிழ் சினிமா இன்று உலக சினிமாக்களுக்கு நிகராக வளர்ந்து வருகிறது. உன்னத படைப்புகள் தமிழில் உருவாகிறது. அதை நினைத்து நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படலாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in