புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்தவர் பவன். அதையடுத்து சில படங்களில் நெகடீவ் ரோல்களில் நடித்த அவர், சமீபத்தில் அருள்நிதி நடித்த தகராறு படத்தில் இன்னொரு ஹீரோ மாதிரியான வேடத்தில் நடித்திருந்தார். ஆக, அதையடுத்து அவருக்கு ஹீரோ வாய்ப்பே இப்போது கிடைத்து விட்டது. விலாசம் என்ற படத்தில் முதன்முறையாக ஹீரோவாகியிருக்கிறார் பவன்.
இதுபற்றி பவன் கூறுகையில், இந்த படத்தில் ஹீரோ என்றாலும், வில்லத்தனமான கதையில்தான் நடித்திருக்கிறேன். அதோடு, எனக்கு கதாநாயகனாக ஆசையெல்லாம் இல்லை.எப்போதுமே நான் கதையின் நாயகன்தான்.அதோடு, இந்த படத்தில் ஹீரோ ஆகிவிட்டேன் என்பதற்காக தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதும் இல்லை. நல்ல வில்லன் வேடம் கிடைத்தாலும் நடிப்பேன். மொத்தத்தில் ஒரு நடிகனாக இருப்பேன் என்கிறார்.
மேலும், இந்த விலாசம் படத்தில் பவனுக்கு ஜோடியாக சனம் நடித்துள்ளார். அவரைபற்றி கூறுகையில், சனம் நல்ல கலர். அதனால் அவர் நிறைய மேக்கப் போட வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அவர் ஓவராகத்தான் மேக்கப்போடுகிறார். ஒரு பாடல் காட்சியில் அவருடன் ஆடியபோது அவர் உடம்பெல்லாம் போட்ட மேக்கப் எல்லாமே என சட்டையில ஒட்டி, என் டிரஸ்செல்லாம் சாயம் பூசின மாதிரி ஆயிடுச்சு. அந்த பாட்டுல உன்னிப்பாக கவனிச்சா அது தெரியும் என்று சொன்ன பவன், மேக்கப்புலதான் ஓவர் என்றாலும், பர்பாமென்ஸ் விசயத்தில் ரொம்ப சரியாக செய்தார் சனம். அதனால் எனது முதல் ஹீரோ பட நாயகியே ஒரு நல்ல திறமையான நடிகை என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சியே என்றார் பவன்.