சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்தவர் பவன். அதையடுத்து சில படங்களில் நெகடீவ் ரோல்களில் நடித்த அவர், சமீபத்தில் அருள்நிதி நடித்த தகராறு படத்தில் இன்னொரு ஹீரோ மாதிரியான வேடத்தில் நடித்திருந்தார். ஆக, அதையடுத்து அவருக்கு ஹீரோ வாய்ப்பே இப்போது கிடைத்து விட்டது. விலாசம் என்ற படத்தில் முதன்முறையாக ஹீரோவாகியிருக்கிறார் பவன்.
இதுபற்றி பவன் கூறுகையில், இந்த படத்தில் ஹீரோ என்றாலும், வில்லத்தனமான கதையில்தான் நடித்திருக்கிறேன். அதோடு, எனக்கு கதாநாயகனாக ஆசையெல்லாம் இல்லை.எப்போதுமே நான் கதையின் நாயகன்தான்.அதோடு, இந்த படத்தில் ஹீரோ ஆகிவிட்டேன் என்பதற்காக தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதும் இல்லை. நல்ல வில்லன் வேடம் கிடைத்தாலும் நடிப்பேன். மொத்தத்தில் ஒரு நடிகனாக இருப்பேன் என்கிறார்.
மேலும், இந்த விலாசம் படத்தில் பவனுக்கு ஜோடியாக சனம் நடித்துள்ளார். அவரைபற்றி கூறுகையில், சனம் நல்ல கலர். அதனால் அவர் நிறைய மேக்கப் போட வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அவர் ஓவராகத்தான் மேக்கப்போடுகிறார். ஒரு பாடல் காட்சியில் அவருடன் ஆடியபோது அவர் உடம்பெல்லாம் போட்ட மேக்கப் எல்லாமே என சட்டையில ஒட்டி, என் டிரஸ்செல்லாம் சாயம் பூசின மாதிரி ஆயிடுச்சு. அந்த பாட்டுல உன்னிப்பாக கவனிச்சா அது தெரியும் என்று சொன்ன பவன், மேக்கப்புலதான் ஓவர் என்றாலும், பர்பாமென்ஸ் விசயத்தில் ரொம்ப சரியாக செய்தார் சனம். அதனால் எனது முதல் ஹீரோ பட நாயகியே ஒரு நல்ல திறமையான நடிகை என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சியே என்றார் பவன்.