போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? | பிளாஷ்பேக்: 'இசைப் பேரரசி' எம் எஸ் சுப்புலக்ஷ்மியின் கலைச் சேவைக்கு வித்திட்ட “ஸேவாஸதனம்” | நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு |
அட்டகத்தி படத்தில் இரண்டாவது, ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படத்தையடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.விஜய சேதுபதியுடன் நடித்த அனுபவத்தை கூறுகையில், ரொம்ப சின்சியரான நடிகர் அவர். நடிப்பில், தான் மட்டுமின்றி, தன்னுடன் இணைந்து நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டுமென்று, நினைப்பார். ரம்மி படத்தில், ஒரு உணர்ச்சிகரமான காட்சியில், சரியான நடிப்பை வெளிப்படுத்த முடியாமல் நான் தவித்தபோது, அவர் தான் எந்த மாதிரி நடிக்க வேண்டுமென்று, எனக்கு டிப்ஸ் கொடுத்தார் என்கிறார். இப்படி சொல்லும் ஐஸ்வர்யாவிடம், பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடிக்க விஜயசேதுபதி தான் உங்களுக்கு சிபாரிசு செய்தாரா? என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. ரம்மி படத்தில் அவருடன் நடிப்பதற்கு முன்பே, பண்ணையாரும் பத்மினியும் படத்தில், நான் கமிட்டாகி விட்டேன். ஆனால், அந்த படம் ரம்மிக்கு பிறகு படமானது. சினிமாவில் சிபாரிசு செய்தெல்லாம் பெரிய நடிகையாக முடியாது என்கிறார்.