ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ரஜினிகாந்தை பற்றி டுவிட்டரில் நேற்று இரவு வெளியான ஒரு செய்தி கோலிவுட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று டுவிட்டரில் செய்தி வெளியானது. மேலும் இந்த செய்தி விண்ணைத்தாண்டி வருவாயா, வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து வி.டி.வி.கணேஷ் பெயரில் வெளியானது. இதனால் ஏராளமான பத்திரிக்கையாளர்களும், ரசிகர்களும் ரஜினி அலுவலகம் மற்றும் அவரது வீடுகளில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். ஆனால் அவர் நலமுடன் இருப்பதாகவும், அவரைப்பற்றி தவறாக செய்திகள் வெளியாகி இருப்பதாகவும் ரஜினி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அது வெறும் வதந்தி தான் தெரியவந்தது.
இதனிடையே வி.டி.வி.கணேஷ் பெயரில் இருந்து டுவிட்டர் செய்தி வெளியானதால் ரஜினி ரசிகர்கள் பலர் அவர் மீது கோபமாக உள்ளனர். ஆனால் தான் அப்படி ஒரு செய்தியை வெளியிடவே இல்லை என கணேஷ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, என் பெயரில் யாரோ போலியாக டுவிட்டரில் இச்செய்தியை வெளியிட்டுள்ளனர். நான் டுவிட்டரில் இல்லவே இல்லை. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய உள்ளேன் என்று கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேன்ஸ் பட விழாவில் ரஜினி போகாததற்கு அவரது உடல்நிலை சரியாக இல்லாதது தான் காரணம் என்றும், அதனால் தான் கோச்சடையான் டிரைலர் கேன்ஸ் விழாவில் வெளியிடப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை படத்தின் தயாரிப்பாளர் மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.