சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
எச்.ஐ.வி. மற்றும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தென்னாப்பிரிக்காவின் ஐசிசி அரைய் டர்பன் என்ற மாபெரும் அரங்கத்தில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி இன்று (ஜூன் 1ம் தேதி) நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 ஆயிரம் தமிழ் ரசிகர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியை செரண்டிபட்டி குழுவினர் நடத்துகின்றனர். 2001ல் முதல் இன்று வரை சுமார் 3000 இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் லோகு இன்னிசை குழுவினர் இந்த நிகழ்ச்சியை லைவ் இன்ஸ்ட்ரூமென்ட் மூலம் நடத்தவிருக்கிறார்கள். இதற்காக சுமார் ஐம்பது இசைக்கலைஞர்கள் சென்னையிலிருந்து கிளம்பியிருக்கிறார்கள். இவர்களுடன் தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர்கள் மனோ, சின்னக்குயில் சித்ரா, "எக்ஸ்யூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி..." புகழ் சுசித்ரா, "அடடா மழைடா..."புகழ் ராகுல் உள்ளிட்ட ஏராளமான பாடகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பாட உள்ளனர். நிகழ்ச்சியில் கிடைக்கும் வருமானத்தின் பெரும் பகுதியை எய்ட்ஸ் நோயாளிகள், மற்றும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவிருக்கிறார்கள்.