ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எச்.ஐ.வி. மற்றும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தென்னாப்பிரிக்காவின் ஐசிசி அரைய் டர்பன் என்ற மாபெரும் அரங்கத்தில் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி இன்று (ஜூன் 1ம் தேதி) நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 ஆயிரம் தமிழ் ரசிகர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியை செரண்டிபட்டி குழுவினர் நடத்துகின்றனர். 2001ல் முதல் இன்று வரை சுமார் 3000 இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் லோகு இன்னிசை குழுவினர் இந்த நிகழ்ச்சியை லைவ் இன்ஸ்ட்ரூமென்ட் மூலம் நடத்தவிருக்கிறார்கள். இதற்காக சுமார் ஐம்பது இசைக்கலைஞர்கள் சென்னையிலிருந்து கிளம்பியிருக்கிறார்கள். இவர்களுடன் தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர்கள் மனோ, சின்னக்குயில் சித்ரா, "எக்ஸ்யூஸ்மீ மிஸ்டர் கந்தசாமி..." புகழ் சுசித்ரா, "அடடா மழைடா..."புகழ் ராகுல் உள்ளிட்ட ஏராளமான பாடகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பாட உள்ளனர். நிகழ்ச்சியில் கிடைக்கும் வருமானத்தின் பெரும் பகுதியை எய்ட்ஸ் நோயாளிகள், மற்றும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவிருக்கிறார்கள்.