சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் தவறு இல்லை, என்று நடிகை ரீமா கல்லிங்கல் கூறியுள்ளார். பரத் நடித்த யுவன் யுவதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ரீமா கல்லிங்கல். கேரளாவை சேர்ந்தவர். கேரளா கபே, ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், சிட்டி ஆப் காட், நீலத்தாமரா, 22 பீமேல் கோட்டயம், நித்ரா உள்பட பல மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். ரீமா கல்லிங்கல், 22 பீமேல் கோட்டயம் படத்தில் நடித்தபோது அவருக்கும், அந்த படத்தின் டைரக்டர் ஆஷிக் அபுவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வருகிறார்கள்.
திருமணம் செய்து கொள்ளாமல் டைரக்டர் ஆஷிக் அபுவுடன் சேர்ந்து வாழ்வது பற்றி ரீமா கல்லிங்கல் அளித்துள்ள பேட்டியில், ஒரு ஆணும், பெண்ணும் மனதளவில் இணைந்து, ஒருவரையொருவர் புரிந்து கொண்டபின், சேர்ந்து வாழ்வதில் தப்பு இல்லை. திருமணம் செய்து கொண்டால் தான் சேர்ந்து வாழ முடியும் என்பதில் எனக்கு உடன்பாடும் கிடையாது. மனதளவில் இணைந்தாலே போதும். புரிதல்தான் மிக முக்கியமானது. கருத்து ஒற்றுமையும், புரிதலும் இருந்தால் ஒரு ஆணும், பெண்ணும் தாராளமாக சேர்ந்து வாழலாம். எனக்கு இந்த வாழ்க்கை பிடித்து இருக்கிறது. இதை தொடர்வதுதான் சிறந்தது என்று கருதுகிறேன், என்று கூறியுள்ளார்.