ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவின் ஆச்சி என்று புகழப்படும் நடிகை மனோரமா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் தற்பேதைய நடிகர்கள் விஷால் வரை உள்ள நடிகர்களின் படங்களில் நடித்தவர் நடிகை மனோராமா. காமெடி என்றால் நடிகர்கள் மட்டும் தான் எனும் நிலையை மாற்றியவர் நடிகை மனோராமா. நடிகைகளும் காமெடியில் ஜொலிக்க முடியும் என்று நிரூபித்தவர். காமெடி, குணச்சித்திரம் என்று பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். வயதான பிறகு சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்டவர் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்ற போது, அங்கு அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். அதனைத்தொடர்ந்து சூர்யாவின் சிங்கம்-2 படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது அந்தப்படமும் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் மனோரமாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை, தி.நகரில் உள்ள தனியார் மருத்துவனையில் ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.