சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
தமிழ் சினிமாவின் ஆச்சி என்று புகழப்படும் நடிகை மனோரமா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் தற்பேதைய நடிகர்கள் விஷால் வரை உள்ள நடிகர்களின் படங்களில் நடித்தவர் நடிகை மனோராமா. காமெடி என்றால் நடிகர்கள் மட்டும் தான் எனும் நிலையை மாற்றியவர் நடிகை மனோராமா. நடிகைகளும் காமெடியில் ஜொலிக்க முடியும் என்று நிரூபித்தவர். காமெடி, குணச்சித்திரம் என்று பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார். வயதான பிறகு சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்டவர் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்ற போது, அங்கு அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையின் குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது தலையில் அடிபட, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். அதனைத்தொடர்ந்து சூர்யாவின் சிங்கம்-2 படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது அந்தப்படமும் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் மனோரமாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை, தி.நகரில் உள்ள தனியார் மருத்துவனையில் ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.