ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜீவா-அஞ்சலி நடித்த படம் கற்றது தமிழ். இந்த படத்தை ராம் இயக்கியிருந்தார். நல்ல தரமான படம் என்ற டாக் இருந்தபோதும் இப்படம் எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை. அதனால் அதையடுத்து உடனடியாக ராமுக்கு படம் இயக்கும் வாய்ப்பு அமையவில்லை. பல வருடங்களாக போராடி வந்தவர், இப்போது டைரக்டர் கெளதம்மேனனின் தயாரிப்பில் தங்கமீன்கள் என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். அப்பா- மகளுக்கிடையேயான பாசத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் நாயகனாகவும் ராமே நடித்துள்ளார்.
இதற்கான கதையை முதலில் கெளதம்மேனனிடம் அவர் சொன்னபோது, வேறு நடிகர்களை யாரையாவது ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்றுதான் சொன்னாராம் ராம். ஆனால், கெளதம்மேனன்தான் இந்த மாதிரி கதைக்கு பெரிய ஹீரோ தேவையில்லை. நீங்களேகூட நடிக்கலாம். அதுவும் கதையை உருவாக்கிய நீங்கள் நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று ராமை நாயகனாக நடிக்குமாறு வற்புறுத்தினாராம். அதனால்தான் தங்கமீன்கள் படத்தில் பாசமான அப்பாவாக நடித்தாராம் டைரக்டர் ராம்.
இப்படம் சமீபத்தில் தணிக்கை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைபார்த்த அதிகாரிகள், ஒரு கட்கூட கொடுக்கவில்லையாம். நல்ல தரமான படம் என்று சொல்லி யு சான்றிதழ் கொடுத்துள்ளார்களாம். இதையடுத்து விரைவில் திரைக்கு வரத்தயாராகி வரும் தங்க மீன்கள் படத்தை, உலக திரைப்பட விழாக்களுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளாராம் கெளதம்மேனன். இப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதை, காட்சிக்காக கண்டிப்பாக விருதுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறராம் அவர்.