சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
பெரும்பாலும் நடிகைகளைப்பொறுத்தவரை 15 வயதிலேயே நடிக்க வந்து விடுகிறார்கள். அதனால் அவர்களது படிப்பு பத்தாம் வகுப்போடு கட்டாகி விடுகிறது. அப்படி படிப்பை பாதியில் விட்ட பத்மப்பிரியா இப்போது வெளிநாடு சென்று படிப்பை தொடர்ந்து வருகிறார். அதேபோல் மேக்னாராஜ், பெங்களூரில் பாதியில் விட்ட படிபபை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆனால், பூ படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த பார்வதி அந்த படத்தில் நடிக்கும்போதும் சரி, நடித்து முடித்தபிறகும் சரி இன்னமும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், எங்கள் ஊரான கேரளாவில் படிப்புக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் நானும் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறேன். அதனால்தான், சினிமாவில் நடிக்க வந்த பிறகும் நான் படிப்பை விடவில்லை. இப்போது மரியான் படத்துக்குபிறகும்கூட எனது படிப்பு தொடர்கிறது. புதிதாக படங்கள் கமிட்டானால்கூட படிப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில்தான் கால்சீட் கொடுப்பேன் என்று சொல்லும் பார்வதி, என்னைப்பொறுத்தவரை எப்போதுமே படிப்புக்குத்தான் முதலிடம் கொடுப்பேன். சினிமா என்பது எனக்கு இரண்டாம்பட்சம்தான் என்கிறார்.