சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
ஒரு படத்தை முப்பது நாட்களில் படமாக்கி முடித்த காலமும் இருந்தது. அப்படி 30 நாட்களில் படமாக்கப்படும் படங்கள் 100 நாள், 150 நாள் என்று வெற்றிகரமாக ஓடி சாதனையும செய்துவந்தன. அதோடு, 20 முதல் 30 லட்சம் பட்ஜெட்டில்தான் அந்த படங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால், இப்போது நிலைமையே வேறு, 50 கோடி, 100 கோடி பட்ஜெட்டெல்லாம் சாதாரணமாகி விட்டது. மேலும், நான்கு படங்கள் அளவுக்கு ஒரே படத்தை படமாக்குகிறார்கள். இதனால் குறைந்தது ஒரு வருடமாவது ஒரு படத்துக்கு எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அப்படி உருவாகும் படம் ஒரு வாரம்கூட தியேட்டரில் நிற்பதில்லை. இது இன்றைய காலம்.
இப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்காக மொத்தம் 150 நாள் கால்சீட் கொடுத்துள்ளார் தனுஷ். மாற்றான் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்குத்தான் இவ்வளவு சலுகையாம். இதைப்பற்றி தனுஷிடம் அவர் சொன்னபோது, அடேயபபா 150 நாளா? நான் இரண்டு படத்துக்கே இவ்வளவு கால்சீட் கொடுத்ததில்லையே என்று வாயை பிளந்தாராம். அதற்கு நான் எடுக்கப்போகும் படம் அப்படி. அதற்கு இவ்வளவு கால்சீட் கட்டாயம் வேண்டும் என்றாராம் கே.வி.ஆனந்த். அதோடு தனுஷின் வழக்கமான சம்பளத்தைவிட இப்படத்துக்காக அதிகமாக வாங்கிக்கொடுத்துள்ளாராம். அதன்பிறகு ஏன் வாயை திறக்கப்போகிறார் தனுஷ். படப்பிடிப்புக்கு எப்போ போலாம் என்று மட்டும்தான் கேட்டாராம்.