தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயண கதையை மூன்று பாகங்களாக இயக்குகிறார். இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ் நடிக்கின்றனர். அனுமனாக சன்னி தியோல் நடிக்கிறார். சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. ராமராக நடிக்கும் ரன்பீர் கபூரும், சீதையாக நடிக்கும் சாய்பல்லவியும்தான் மூன்று பாகங்களிலும் வருகிறார்கள். அதனால் இவர்கள் இருவரும் படத்திற்கு 300 நாள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மூன்று பாகத்திற்கும் சேர்த்து சாய் பல்லவிக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சாய் பல்லவி ஒரு படத்திற்கு 3 கோடி முதல் 5 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். இது மூன்று பாகம் என்பதால் இவ்வளவு சம்பளம் என்கிறார்கள்.