விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரான சிரஞ்சீவி அரசியலுக்கு சென்று 'பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை தொடங்கினார். அது வெற்றி பெறவில்லை. பின்பு காங்கிரசில் சேர்ந்து மத்திய அமைச்சர் ஆனார். பின்னர் அரசியலில் இருந்து விலகி தற்போது சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார்.
சிரஞ்சிவியின் தம்பி பவன் கல்யாணும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர். அவர் 'ஜனசேனா' என்ற கட்சியை நடத்தி வருகிறார். தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும் கட்சியை நடத்தி வருகிறார். நடைபெற இருக்கும் பார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்.
இந்நிலையில் சீரஞ்சிவி தனது தம்பிகளான பவன் கல்யாண், நாகபாபுவை ஐதராபாத் வரும்படி அழைத்தார். ஐதராபாத் புறநகரில் உள்ள முச்சிந்தலில் 'விஸ்வம்பரா' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சீரஞ்சிவியை இருவரும் சந்தித்தனர். தம்பிகளுடன் மகிழ்ச்சியாக கலந்துரையாடி பின்னர் ஜனசேனா கட்சியின் தேர்தல் செலவுக்காக 5 கோடி ரூபாயை நன்கொடையாக சிரஞ்சீவி வழங்கினார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்தார் பவன் கல்யாண்.