நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரான சிரஞ்சீவி அரசியலுக்கு சென்று 'பிரஜா ராஜ்யம்' என்ற கட்சியை தொடங்கினார். அது வெற்றி பெறவில்லை. பின்பு காங்கிரசில் சேர்ந்து மத்திய அமைச்சர் ஆனார். பின்னர் அரசியலில் இருந்து விலகி தற்போது சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார்.
சிரஞ்சிவியின் தம்பி பவன் கல்யாணும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர். அவர் 'ஜனசேனா' என்ற கட்சியை நடத்தி வருகிறார். தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும் கட்சியை நடத்தி வருகிறார். நடைபெற இருக்கும் பார்லிமென்ட் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்.
இந்நிலையில் சீரஞ்சிவி தனது தம்பிகளான பவன் கல்யாண், நாகபாபுவை ஐதராபாத் வரும்படி அழைத்தார். ஐதராபாத் புறநகரில் உள்ள முச்சிந்தலில் 'விஸ்வம்பரா' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சீரஞ்சிவியை இருவரும் சந்தித்தனர். தம்பிகளுடன் மகிழ்ச்சியாக கலந்துரையாடி பின்னர் ஜனசேனா கட்சியின் தேர்தல் செலவுக்காக 5 கோடி ரூபாயை நன்கொடையாக சிரஞ்சீவி வழங்கினார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்தார் பவன் கல்யாண்.