கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் |
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது 'அக்கா' என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார். தர்மராஜ் ஷெட்டி இயக்கும் இத்தொடரில் 'கபாலி' பட கதாநாயகி ராதிகா ஆப்தேவும் நடிக்கிறார். இத்தொடரின் படப்பிடிப்பு கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கேரளாவில் நடந்துள்ளது.
அது குறித்து கீர்த்தி சுரேஷ், “கேரளாவில் என்னுடைய வனவாசம் முடிந்து 40 நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு சோஷியல் மீடியாவிற்கும் திரும்பிவிட்டேன். அற்புதமான படப்பிடிப்பை முடித்து வீட்டுக்கு வந்துள்ளேன். என்னுடைய அடுத்த படப்பிடிப்புகளுக்காகக் காத்திருக்க முடியவில்லை. ஆச்சரியமாக வெயிலின் சூட்டைத் தணிக்க மிஸ் மழையும் வந்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். மீண்டும் இணைவோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கீர்த்தி தற்போது தமிழில் 'ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.