தனுஷ் படம் குறித்து பகிர்ந்த கிர்த்தி சனோன் | சர்ச்சை வீடியோ விவகாரம் : பிக்பாஸ் விக்ரமன் வெளியிட்ட தகவல் | 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு கம்பேக் தரும் சங்கீதா | சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கார்த்தி | ரம்பாவின் சொத்து மதிப்பு 2000 கோடி: தயாரிப்பாளர் தாணு தந்த தகவல் | ஸ்ரீதேவியின் 'மாம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் மகள் குஷி கபூர் | ஹிந்தியில் 'டாப் ஸ்டார்' ஆகும் ராஷ்மிகா மந்தனா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா | புதிய சீரியலில் மான்யா ஆனந்த் |
துபாய் : 2016 ஆண்டு முதல் தொடர்ச்சியாக அமீரக தமிழர்களின் மேடை நாடக ஆர்வத்தை வளர்த்து வரும் அமீரக குறுநாடக குழுவினர், கொரோனா பீதி சமயத்தில் மேடைகள் தடை செய்யப்பட்ட காரணத்தால் குறும்படங்கள் இயக்க தங்கள் குழுவினரை ஊக்குவித்தனர்.
2020ம் ஆண்டு முதல் தற்போது நான்காம் ஆண்டாக நடைபெறப்போகும் இவ்விழாவில் பங்கு கொள்ள அமீரகத் தமிழர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டனர். தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரமும், தொலைக்காட்சி தயாரிப்பில் முன்னோடிகளில் ஒருவருமான நடிகை குட்டி பத்மினி நடுவராக இந்த விழாவிற்கு தலைமையேற்கிறார்.
35க்கும் மேற்பட்ட குறும்படங்கள் இதில் பங்கேற்க உள்ளனர். படங்கள் திரையிடப்படும் தேர்வு வரிசையை வீடியோ மூலம் வெளியிட்டு, வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கபடுத்தினார் நடுவர். பதிவு முறை மூலம் மட்டுமே, 13ம் தேதி குட்டி பத்மினி அவர்களை நேரில் சந்தித்து உரையாடவும், ஏப்ரல் 14 காலை படங்களை பார்க்கவும் இயலும்.
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த குறும் படங்கள் வெளியிடப்பட்டு அன்று மாலையே வெற்றியாளர்களுக்கு 12 பிரிவில் 28 வகையான பரிசுகளும், பங்கு கொண்டவர்களுக்கு நினைவு சின்னமும் வழங்கப்படும் என நிகழ்ச்சி அமைப்பாளர் ஆனந்த் மற்றும் ரமா மலர் தெரிவித்தனர்.