இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் |

நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார், மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் மார்ச் 22ம் தேதி வெளியான படம் 'ரெபல்'. இப்படத்திற்கு சிறப்பான விமர்சனங்களோ, வரவேற்போ கிடைக்கவில்லை. அதனால் படம் எதிர்பார்த்ததை விடவும் மோசமான வசூலையே பெற முடிந்தது. இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இப்படத்தை இன்று முதல் ஓடிடியில் வெளியிட்டுள்ளார்கள்.
பொதுவாக ஒரு தமிழ்ப் படம் தியேட்டர்களில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்பதை தமிழ்த் திரையுலகத்தில் பாலோ செய்து வருகிறார்கள். அப்படியிருக்க, இந்தப் படத்தை இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
புதிய படங்கள் வெளியானால் எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் தர வேண்டும் என ஒரு கோரிக்கை உள்ளது. அது குறித்து திரையுலக சங்கங்கள் விரைவில் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்கள். 'ரெபல்' இப்படி இரண்டு வாரங்களில் வெளியானதை வைத்து மேலும் சில படங்கள் இப்படி வெளியாக வாய்ப்புகள் உள்ளது.




