மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் | போதை பார்ட்டியில் கலந்து கொண்டேனா? : நடிகர் ஸ்ரீகாந்த் விளக்கம் | சம்பளம் கேட்டால் மிரட்டுகிறார் : தயாரிப்பாளர் மீது நடிகை பாயல் புகார் | கல்கி 2898 ஏடி, இந்தியன் 2 - அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்டங்கள் ரிலீஸ் | நட்பா, துரோகமா ? - அழுத்தமாக மிரட்டும் 'கருடன்' டிரைலர் | முதன் முறையாக தேர்தலில் ஓட்டளித்த அக்ஷய்குமார் | சின்னத்திரைக்கு வந்தார் வடிவேலு |
லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதை தொடர்ந்து விஜய், அஜித் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். சண்டக்கோழி படத்தின் மூலம் இன்னும் பிரபலமானார். இந்த நிலையில் மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் நேற்று காலமானார். 83 வயதான இவர் வயோதிகம் காரணமாக மரணத்தை தழுவியுள்ளார். இவரது இறுதிச் சடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
தனது தந்தையின் இளமைக்கால புகைப்படம் உள்ளிட்ட சில புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மீரா ஜாஸ்மின், “நாம் மீண்டும் சந்திக்கும் வரை..” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் ஆரம்ப காலகட்டங்களில் மும்பையில் வசித்தவர், அதன்பின் அப்படியே ஆந்திராவிற்கு இடம் பெயர்ந்து திருமலாவிலும் வசித்துள்ளார். அதன்பிறகு கேராளவில் எர்ணாகுளத்திற்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு மீரா ஜாஸ்மின் தவிர இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் என இன்னும் நான்கு வாரிசுகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.