விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
நடிகைகள் என்றாலே அவர்கள் வேறு ஒரு உலகத்தில் பயணிப்பவர்கள் என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கும். ஆனால், ஒரு சிலர் மட்டும்தான் இயல்பான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கள். தங்களது பிரபலத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மக்களோடு மக்காளகவும் பயணிப்பார்கள்.
அப்படி ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் 'வேட்டையன்' நடிகை ரித்திகா சிங். மும்பையில் நெருக்கடியான லோக்கல் டிரையினில் பயணித்துள்ளது குறித்து பதிவிட்டுள்ளார்.
“எனது ஹேன்ட்பேக்கில் நிறைய கீ செயின்கள் இருப்பதை அந்த பையன்கள் பார்த்து இன்னும் கூடுதலாக சேர்த்துவிட்டார்கள். அவர்களுக்கு என்னை ஞாபகமில்லை, காரணம் நான் எப்போதுமே மாஸ்க் அணிவேன். ஆனால், அவர்களை நான் கடந்த வாரம் கூடப் பார்த்தேன். அவர்களைத் தவிர்க்க நினைத்தேன், ஆனால், நேற்று அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் மெட்ரோ ரயில் வந்த புதிதில் நடிகர் ஆர்யா கூட அதில் அடிக்கடி பயணம் செய்து வந்தார். இப்போதெல்லாம் பயணிப்பதில்லை போலிருக்கிறது. பொதுப் போக்குவரத்தை சினிமா பிரபலங்கள் பயன்படுத்துவது மிகவும் அபூர்வமானதுதானே.