நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
புகழ்பெற்ற அரேபிய கதை 'ஆயிரத்தொரு இரவுகள்'. இதில் இடம் பெற்ற முக்கியமான கதை அலிபாபாவும், அலாவுதீனும். இரண்டுமே தமிழ் சினிமாவில் படமாகி உள்ளது. 1955ம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆர் நடித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் தயாரான முதல் கலர் (கேவா) படம் இது.
அலிபாபா கதையில் முதலில் நடித்தது எம்.ஜி.ஆர். தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அலிபாபாவாக முதலில் நடித்தது என்.எஸ்.கிருஷ்ணன். 1941ல் வெளியான 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் அலிபாபாவாக என்.எஸ்.கிருஷ்ணன் நடித்தார். என்.எஸ்.கிருஷ்ணன் கதை நாயனாக நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.
அலிபாபா காதலிக்கும் மார்ஜியானாக என்.எஸ்.கிருஷ்ணனின் நிஜ மனைவி டி.ஏ.மதுரம் நடித்தார். அலிபாபாவின் கொடுமைக்கார அண்ணன் காசீமாக கன்னட நடிகர் ஹிரண்யா நடித்தார். கொள்ளைக்கூட்டத் தலைவனாக கே.பி.காமாட்சி நடித்தார். என்.எஸ்.பாலகிருஷ்ணன் இசையமைத்திருந்தார். இந்த படம் தோல்வி அடைந்தது.