விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் 'கேம் சேன்ஞ்சர்', தமிழில் 'இந்தியன் 2' என்ற இரு படங்களிலும் பிசியாக இருக்கிறார். இரண்டுமே 300 கோடிக்கும் கூடுதலான பட்ஜெட்டில் தயாராகிறது. இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட ஷங்கர் அதற்கு பிந்தைய பணிகளில் ஈடுபட்டு வந்தார். அற்போது அந்த பணிகளுக்கு சின்ன கேப் விட்டு மகளின் திருமணத்தில் பிசியாகி விட்டார்.
ஷங்கருக்கு இரண்டு மகள்கள்; இளைய மகள் அதிதி தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கு புதுச்சேரியை சேர்ந்த விளையாட்டு வீரர் ரோகித் என்பருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரோகித் போக்சோ வழக்கில் சிக்கியதால் அவரிடமிருந்து பிரிந்து விவாகரத்து பெற்றார் ஐஸ்வர்யா.
தற்போது ஐஸ்வர்யாவை தனது உதவி இயக்குனர் தருண் கார்த்திக் என்பவருக்கு மணமுடித்து கொடுக்கிறார் ஷங்கர். தற்போது இந்த திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. முக்கிய பிரமுகர்களுக்கு ஷங்கர் தனது மனைவியுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கினார். இந்த திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்திருக்கிறார் ஷங்கர்.