விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |
இலங்கையில் செயல்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. அதேபோல வானொலி அறிவிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா பற்றியும் படங்கள் வந்திருக்கிறது. தற்போது இந்த அமைப்பின் அடுத்த கட்ட தலைவர்கள் பற்றிய படம் தயாராகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதியாக இருந்த பிரிகேடியர் பால்ராஜ் மற்றும் பிரிகேடியர் தமிழினி ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து 'செஞ்சமர்' என்ற படம் தயாராகிறது. இதில் ஜெகநாதன், முருகன், பகலவன், குட்டி ராதிகா, சாக்ஷி அகர்வால், மைம் கோபி, ரஞ்சன், கீர்த்தனா, விஷ்வா, சதீஷ், சஞ்சய் ஆகியோர் நடித்துள்ளனர். சி.ஜி.எம்.பிக்சர்ஸ் சார்பில் மணிவண்ணன் தயாரிக்கிறார்.
அதிரை தமீம் அன்சாரி இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது ''இலங்கையில் இறுதிப்போருக்கு பின் தொலைந்து போன தமிழர்கள் என்ன ஆனார்கள்? திரும்பி வருவார்களா? என்ற ஆய்வை செய்ய இலங்கைக்கு ஐ.நா. போக வேண்டுமா? வேண்டாமா? என்ற போராட்டத்தோடு படம் தொடங்குகிறது. குறிப்பாக பிரிகேடியர் பால்ராஜ், தமிழினி பற்றியும் படம் பேசுகிறது.
இறுதி போருக்கு முன்னால் தமிழ் மக்கள் மற்றும் விடுதலை போராளிகளின் வாழ்வியல் எப்படி இருந்தது? என்பதையும் படம் அலசும். இந்த படம் இலங்கை தமிழர் வாழ்வுரிமை போராட்டத்தை உலக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும்'' என்றார்.