ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தமிழ் சினிமா எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஆரம்ப கட்டத்தில் தவித்து வருகிறது. இந்த வருடத்தின் மூன்றாவது வாரம் முடிய இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. ஆனாலும், இதுவரையில் லாபகரமான வெற்றி என எந்த ஒரு படத்தையும் சொல்ல முடியவில்லை.
நேற்று கூட ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'ரெபல்' படம் வெளிவந்தது. அப்படத்திற்கும் கூட ரசிகர்கள் பெரிய அளவில் ஆதரவு தரவில்லை. நேற்றுமுன்தினம் தான் இந்த ஆண்டிற்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகின. முதல் போட்டியே சென்னையில் நடந்தது. அதுவும் சென்னை அணிக்கும், பெங்களூரு அணிக்குமான போட்டி. அதனால், நேற்றுமுன்தினம் மாலையிலிருந்தே தமிழக கிரிக்கெட் ரசிகர்களை ஜுரம் பற்றிக் கொண்டது.
ஏற்கெனவே முழு ஆண்டுத் தேர்வுகளாலும் தியேட்டர்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இப்போது பிரீமியர் லீக் போட்டியும், சில தினங்களுக்கு முன்பாகவே தேர்தல் பிரச்சாரமும் ஆரம்பமாகிவிட்டது. அதனால், தியேட்டர்களில் கூட்டம் மேலும் குறைய ஆரம்பித்துள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்றாலும் பத்து சதவீதம் கூட தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்படவில்லை.
கிரிக்கெட், தேர்தல் முடிந்த பின்புதான் மக்கள் சினிமா பக்கம் திரும்புவார்கள். அதுவரையில் தள்ளாட்டம், திண்டாட்டம்தான் இருக்கும்.