இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் | அரண்மனையில் கலகலப்பு : சுந்தர்.சியின் அடுத்த பிளான் |
சின்னத்திரை நடிகை பாவ்னி ரெட்டி முதல் கணவரை இழந்த சோகத்திலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டு அதன்பின் புது வாழ்வை தொடங்கியிருக்கிறார். பிக்பாஸ் ஹவுஸ்மேட்டான அமீரின் காதலை ஏற்றுக்கொண்ட பாவ்னி அவருடன் தற்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், 'எனக்கு ஒருவரை பிடித்துவிட்டது என்றால் அவர்களுக்காக எதையும் செய்யக்கூடியவள். அவர்கள் மட்டும் தான் என்னுடைய உலகம் என்று வாழ்ந்து கொண்டிருப்பேன். அப்படிப்பட்டவர்கள் என்னுடைய வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டால் நான் எவ்வளவு வேதனை பட்டிருப்பேன். ஆனால், சிலர் அதை அசால்ட்டாக கேவலப்படுத்தி கமெண்ட் போடுகிறார்கள். நானே என் கணவரை கொன்றுவிட்டதாக சொல்கிறார்கள். அதுபோல இப்போது அமீரை எப்போது கொல்ல போகிறாய்? என்று கேட்கிறார்கள்' என வேதனையுடன் பேசியுள்ளார்.