22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பிருத்திவிராஜ் என்கிற பப்லு மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்த்து வந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன் திடீரென ஷீத்தலும் பப்லுவும் பிரிந்துவிட்டனர். அதை உறுதி செய்யும் வகையில் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நீக்கிவிட்டனர். இதுகுறித்து பல்வேறு வதந்திகள் இப்போது வரை பரவி வரும் நிலையில் ஷீத்தல் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், 'என் கடந்த கால வாழ்க்கை குறித்து பலரும் பல்வேறு விதமாக கேட்கிறீர்கள். பலரும் என் சூழ்நிலை பற்றி தெரியாமல் தவறாக புரிந்து கொள்கிறீர்கள். நானும் பப்லுவும் திருமணம் செய்து கொள்ளவில்லை. லிவிங் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்தோம். எங்கள் உறவு நாங்கள் எதிர்பார்த்தது போல் இருக்கவில்லை. அதனால் இருவரும் பிரிந்திருக்கிறோம். இருவரும் சேர்ந்திருந்தது மகிழ்ச்சியான தருணங்கள். ஆனால், இது பிரிவதற்கான நேரம். எங்களின் இந்த முடிவை மதித்து எங்களுக்கான நேரத்தை கொடுங்கள்' என்று கூறியுள்ளார்.