மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தற்போது ஹரி இயக்கியுள்ள ரத்னம் படத்தில் நடித்திருக்கும் விஷால், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய 25 ஆண்டு கனவு இப்பொழுது தான் நனவாக போகிறது என்று தெரிவித்துள்ளார். அதோடு, ‛‛என்னுடைய தந்தையிடத்தில் நான் இயக்குனராக வேண்டும் என்று சொன்னபோது அவர் நடிகர் அர்ஜுனிடம் என்னை உதவி இயக்குனராக சேர்த்து விட்டார். பின்னர் அவர் விஷால் இப்போது நடிக்கட்டும். இயக்குனர் எப்போது வேண்டுமானால் ஆகிக்கொள்ளலாம் என்று சொன்னதை அடுத்து செல்லமே படத்தில் ஹீரோ ஆனேன்.
இந்த நிலையில்தான் தற்போது துப்பறிவாளன்- 2 படத்தின் மூலம் இயக்குனராகப் போகிறேன். அந்த வகையில் என்னுடைய 25 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது. துப்பறிவாளன்- 2 படப்பிடிப்புக்காக இன்று லண்டன் சென்று லொகேஷன் பார்க்கும் வேலையை முதற்கட்டமாக தொடங்கி, மே மாதம் முதல் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். ஒரு இயக்குனராக எனது கனவை முன்னெடுக்க உதவிய மிஷ்கினுக்கு நன்றி. ஒரு இயக்குனராக உங்கள் முன்பு பேசிக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நேரம் நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், ஒரு லட்சியம் ஒரு கனவு என்பதை அனைவரும் கண்டிப்பாக வைத்திருப்போம். அந்த கனவை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வந்தால் நிச்சயம் ஒரு நாள் நனவாகும் என்று தெரிவித்து இருக்கிறார் விஷால்.