ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தற்போது ஹரி இயக்கியுள்ள ரத்னம் படத்தில் நடித்திருக்கும் விஷால், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய 25 ஆண்டு கனவு இப்பொழுது தான் நனவாக போகிறது என்று தெரிவித்துள்ளார். அதோடு, ‛‛என்னுடைய தந்தையிடத்தில் நான் இயக்குனராக வேண்டும் என்று சொன்னபோது அவர் நடிகர் அர்ஜுனிடம் என்னை உதவி இயக்குனராக சேர்த்து விட்டார். பின்னர் அவர் விஷால் இப்போது நடிக்கட்டும். இயக்குனர் எப்போது வேண்டுமானால் ஆகிக்கொள்ளலாம் என்று சொன்னதை அடுத்து செல்லமே படத்தில் ஹீரோ ஆனேன்.
இந்த நிலையில்தான் தற்போது துப்பறிவாளன்- 2 படத்தின் மூலம் இயக்குனராகப் போகிறேன். அந்த வகையில் என்னுடைய 25 ஆண்டு கால கனவு நனவாகியுள்ளது. துப்பறிவாளன்- 2 படப்பிடிப்புக்காக இன்று லண்டன் சென்று லொகேஷன் பார்க்கும் வேலையை முதற்கட்டமாக தொடங்கி, மே மாதம் முதல் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். ஒரு இயக்குனராக எனது கனவை முன்னெடுக்க உதவிய மிஷ்கினுக்கு நன்றி. ஒரு இயக்குனராக உங்கள் முன்பு பேசிக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நேரம் நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், ஒரு லட்சியம் ஒரு கனவு என்பதை அனைவரும் கண்டிப்பாக வைத்திருப்போம். அந்த கனவை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வந்தால் நிச்சயம் ஒரு நாள் நனவாகும் என்று தெரிவித்து இருக்கிறார் விஷால்.