ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு | விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா | மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல் | பிறந்தநாளில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தும் விஜய்? | தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் விக்ரமின் அந்நியன் | மம்முட்டிக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பவர் | படம் வெளியாவதற்கு முன்பே மறைந்த சங்கீத் சிவன் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு | அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் |
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‛கோழிப்பண்ணை செல்லதுரை'. இந்த படத்தில் கதாநாயகனாக ஏகன் என்பவர் நடித்துள்ளார். முக்கியமான வேடத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். கனா காணும் காலங்கள் தொடர் மூலம் வெளிச்சம் பெற்ற ஏகன், அதன்பிறகு 'ஜோ' என்கிற படத்தில் ஒரு அறிமுக நடிகராக வெளிப்பட்டார். அதை தொடர்ந்து தான் இந்த கோழிப்பண்ணை செல்லதுரை பட வாய்ப்பு அவரை தேடி வந்தது.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இவரது நடிப்பை பார்த்த யோகிபாபு, இவரை தனது கேரவனுக்குள் அழைத்து, “நன்றாக நடிக்கிறாய். அப்படியே அதை தக்க வைத்துக்கொள். அது மட்டுமல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடி. பணத்தின் பின் போகாதே” என்று ஓர் அறிவுரையும் கூறியுள்ளார். இதனை ஏகன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.