ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ்ப் படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெறும் கிரன்ச்சிரோல் அனிமே அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ளார்.
'புஷ்பா' படம் மூலம் ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்த நடிகையான ராஷ்மிகாவை அங்குள்ள அவரது ரசிகர்கள் வரவேற்று வாழ்த்தியுள்ளனர். அவரை சந்தித்த புகைப்படங்களையும் ரசிகர்கள் சிலர் பதிவிட்டுள்ளனர். அவர்களது அன்பிற்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துள்ளார் ராஷ்மிகா.
இந்திய நடிகைகளில் ஒரு சிலருக்குத்தான் ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும் ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். தனக்கும் அங்கு ரசிகர்கள் இருப்பது குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.