ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5ல் நடுவர்களாக தாங்கள் பங்கேற்கவில்லை என செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் அறிவித்திருந்தனர். அதேசமயம் புதியதோர் நிகழ்ச்சியை தாமுவும், வெங்கடேஷ் பட்டும் இணைந்து செய்யப் போவதாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் வெங்கடேஷ் பட் தாமுவுடன் சேர்ந்து வெளியிட்ட வீடியோ ஒன்றை திடீரென நீக்கியுள்ளார். இதனையடுத்து நெட்டிசன்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக பல்வேறு கோணங்களில் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு தற்போது பதிலடித்த கொடுத்துள்ள வெங்கடேஷ் பட் 'பூனை கண் மூடினால் உலகம் இருண்டு விடுமோ. இணையத்தில் பதிவை நீக்கினால் உறைத்தது மறையுமோ. சொல் தவறினாலும் நட்பு மாறாது' என அழகிய தமிழில் தங்கள் நட்பு உடையவில்லை என விளக்கம் தெரிவித்துள்ளார்.