22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
அரண்மனை நான்காம் பாகம் மற்றும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வரும் தமன்னா தற்போது'ஒடேலா 2' தொடரில் நடிக்கிறார். 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' வெற்றிக்குப் பிறகு நடிக்கும் தொடர் இது. அந்த சீரிஸில் கதைக்காக தனது காதலர் விஜய் வர்மாவுடன் இவர் காட்டிய தாராள நெருக்கம் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானது. இதனால், பல வெப் சீரிஸ்கள் வாய்ப்பு தமன்னாவுக்கு வருகிறது.
கடந்த 2022-ல் ஓடிடியில் வெளியான க்ரைம் த்ரில்லர் தொடர் 'ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்'. அசோக் தேஜா இயக்கத்தில் உருவான இந்த க்ரைம் த்ரில்லர் கதையை சம்பத் நந்தி எழுதினார். இப்போது அதன் தொடர்ச்சி 'ஒடேலா 2' என்ற பெயரில் உருவாகிறது. இதில் தான் நடிகை தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று வாராணசியில் தொடங்கியது. இந்தத் தொடர் கிராமிய பின்னணியில் உருவாகிறது. ஹிந்தியில் தயாரானாலும் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகிறது.