ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு | விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா | மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல் | பிறந்தநாளில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தும் விஜய்? | தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் விக்ரமின் அந்நியன் | மம்முட்டிக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பவர் | படம் வெளியாவதற்கு முன்பே மறைந்த சங்கீத் சிவன் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு | அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் |
சென்னையில் பிறந்து வளர்ந்த தெலுங்கு பொண்ணு சிருகுரி மானசா சவுத்ரி. ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. முடித்துள்ளார். மானசாவின் கனவு எப்போதும் மாடலிங் மற்றும் நடிப்பை நோக்கியே இருந்தது. மாடலிங் உலகிற்குள் அவர் 16 வயதிலேயே நுழைந்தார். நீச்சல், ஸ்கேட்டிங், துப்பாக்கி சூடு மற்றும் நடனம் எனப் பல்வேறு திறமைகளை கொண்டுள்ளார். ரவிகாந்த் பெரும்பு இயக்கிய 'பப்பில்கம்' என்று தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது "தமிழ் படத்தில் அறிமுகமாகத்தான் விரும்பினேன் ஆனால் வாய்ப்பு கிடைத்தது தெலுங்கு படத்தில் என்றாலும் இப்போது தமிழ் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால் தமிழ் எனக்கு சரளமாக பேசத் தெரியும். நான் நடிக்கும் படங்களில் நானே தமிழில் டப்பிங் பேசவும் முடிவு செய்து இருக்கிறேன். நான் நடிக்கும் படம் பற்றிய முறையான அறிவிப்புகளை தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடுவார்கள்" என்றார்.