மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு |
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சுதா இயக்கத்தில் தனது 43வது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இதுதவிர வாடிவாசல் படமும் அவர் கைவசம் உள்ளது. இந்நிலையில் ஹிந்தியில் மகாபாரதத்தை தழுவி கர்ணன் கதையை வைத்து பிரமாண்ட படம் உருவாக உள்ளது. இதை ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்க உள்ளார். இதில் கர்ணன் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு 'கர்ணா' என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. தற்போது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படம் தொடர்பாக ஏற்கனவே சூர்யாவும், ராகேஷ் ஓம் பிரகாஷூம் சந்தித்து பேசிய குறிப்பிடத்தக்கது.