22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கன்னட சினிமாவில் அறிமுகமானவர் ராகினி திவேதி. இடையிடையே மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். 2014ம் ஆண்டு சமுத்திரகனி இயக்கிய 'நிமிர்ந்து நில்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தார். அதுதான் அவர் முதலும், கடைசியுமாக நடித்த தமிழ் படம்.
அதன் பிறகு கன்னட சினிமாவில் பிசியாக நடித்தவர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்தார். இப்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ள அவர் மீண்டும் நடிக்கத் தொடங்கிருக்கிறார்.
10 வருடங்களுக்கு பிறகு அவர் நடிப்பில் உருவான 'இமெயில்' என்ற படம் வருகிற 9ம் தேதி வெளியாகிறது. எஸ்.ஆர் பிலிம் பேக்ட்ரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து, இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக 'முருகா' அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார். இவர்கள் தவிர மனோபாலா, லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ , அக்ஷய் ராஜ், ஆரஞ்சு மிட்டாய் பிரபா உள்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், கன்னடம் என இருமொழிகளிலும் வெளியாகிறது.