மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் தமிழில் வெளிவந்த 'அயலான்' படம் தெலுங்கில் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சட்டச் சிக்கல் காரணமாக படம் வெளியாகவில்லை. காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாலையிலாவது படம் வெளியாகும் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். அதுவும் நடக்காமல் பட வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது.
படம் வெளியாகாமல் போனதற்கு என்ன காரணம் என படத்தின் தயாரிப்பு நிறுவனமும், தெலுங்கில் படத்தை வெளியிடும் நிறுவனமும் எதுவுமே சொல்லவில்லை. பொங்கலுக்கு படத்தை தெலுங்கில் வெளியிடாமல் சிலர் தடுத்ததற்கு பொங்கி எழுந்த வினியோக நிறுவனம் அப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதே சமயம் நேற்று வெளியாகாமல் போனதற்கு எதுவுமே சொல்லாமல் போனது தெலுங்கில் உள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.
அடுத்த வாரம் பல தெலுங்குப் படங்கள் வெளிவர உள்ளதாம். அதற்கடுத்த வாரம் 'அயலான்' படத்தின் தமிழ்ப் பதிப்பு ஓடிடியில் வெளிவந்துவிடும். எனவே, அடுத்த வாரம் தெலுங்கில் படம் வெளியானாலும் ஒரு வாரம் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும். நேற்றைய வெளியீட்டிற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இந்த வார விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார்கள் 'அயலான்' குழுவினர்.