22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
இந்த ஆண்டின் 3வது வெள்ளிக்கிழமையான இன்று புதிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இது ஒரு அபூர்வ நிகழ்வாகும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சேப்டர் 1, மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் வெளிவந்தன. நான்குமே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் வசூலின் அடிப்படையில் 'அயலான்' முதலிடத்தில் இருக்கிறது. பண்டிகை கால படங்கள் ஒரு வாரத்தையும் தாண்டி ஓடும் என்பதால் அதற்கு அடுத்த வாரத்தில் படங்கள் எதுவும் வெளிவராது என்பது நடைமுறையில் இயல்பாக உள்ளது. என்றாலும் சில சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகும். ஆனால் இந்த முறை அப்படி எதுவும் வெளிவரவில்லை.
இதற்கு காரணம் அயலான், கேப்டன் மில்லர் படங்கள் ஏராளமான தியேட்டர்களை ஆக்கிரமித்து கொண்டது. விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த 'மிஷன் சேப்டர் 1' படத்திற்கே போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று அதன் இயக்குனர் ஏ.எல்.விஜய் பகிரங்கமாகே கூறியிருந்தார். இந்த நிலையில் வெளியாக தயாராக இருந்தும் சில சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காததால் இந்த வாரம் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.
அடுத்த வாரம் சிங்கப்பூர் சலூன், புளூ ஸ்டார், முடக்கறுத்தான், நியதி, த.நா ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.