யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |
நயன்தாரா நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அன்னபூரணி என்கிற படம் வெளியானது. பின்னர் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள், வசனங்கள் இந்து மத உணர்வாளர்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளதாக கூறி இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து இந்த படம் சம்பந்தப்பட்ட ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சென்சார் அதிகாரிகள் பார்த்து ஏற்கனவே சான்றிதழ் அளித்த ஒரு படத்தை குறிவைத்து இப்படி தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அன்னபூரணி படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் பேரரசு வெற்றிமாறனின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “வெற்றிமாறனின் கருத்து வரவேற்கப்படுகிறது. இதே போன்ற கருத்தை கேரள ஸ்டோரி படம் வெளியான சமயத்திலும் அவர் வெளிப்படுத்தி இருந்தால் சினிமா மீது அவர் நிஜமாகவே அக்கறை எடுத்துக் கொள்கிறார் என்பது உறுதியாகி இருக்கும். ஆனால் அவர் அன்னபூரணிக்காக மட்டும் குரல் கொடுப்பதை பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. சினிமா ரசிகனாக இருங்கள் வெற்றிமாறன்” என்று கூறியுள்ளார்.
பேரரசுவின் இந்த கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.