பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

டில்லியை சேர்ந்தவர் நடிகை தேவயானி ஷர்மா. ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். 2021ம் ஆண்டு , 'ரொமான்டிக்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் செகண்ட் ஹீரோயினாக ஆனார். தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பிசியாக இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் “சிம்புவுடன் நடித்தே தீருவேன். அதற்கான வேலைகளை தொடங்கி விட்டேன்” என்று பகிரங்கமாக அறிவித்து பரபரப்பு கிளப்பி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நான் நடித்தாலும் எனக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது. சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் வெளிப்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும். கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம்.
வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதுதான். இதற்காக முழு வீச்சில் இறங்கி உள்ளேன், அதற்கான வேலையும் தொடங்கி விட்டது. அதுமட்டுமின்றி மக்கள் நான் பார்க்கும் வேலையை அங்கீகரித்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய வாழ்வின் லட்சியமாகும்” என்கிறார்.