அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு | 'சர்பரோஸ்' 25ம் வருடத்தில் 2ம் பாகத்தை அறிவித்த அமீர்கான் | படத்தை ரிலீஸ் பண்ண விடாமல் டொவினோ தாமஸ் தடுக்கிறார் ; இயக்குனர் விரக்தி | குகைக்குள் விழுந்தவருக்கு பிஸ்கட்டால் மேக்கப் ; மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் புது தகவல் | ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவு: குடும்ப பிரச்னை காரணமா? | கெட்ட வார்த்தையுடன் சந்தானம் பட புரோமோ வீடியோ | 2026 தேர்தல் - விஜய், விஷாலைத் தொடர்ந்து சூர்யா ? | சித்தப்பா பவன்கல்யாணை சந்தித்த ராம் சரண் | விக்ரமின் ‛வீர தீர சூரன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! |
கன்னட சினிமாவில் இரண்டாவது வரிசையில் இருந்த யஷ், 'கேஜிஎப்' படங்களுக்கு பிறகு பான் இந்தியா நட்சத்திரமாகி விட்டார். அவருக்கு கோடிக் கணக்கில் ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் யஷ் பிறந்த நாளையொட்டி அவரது பேனர் வைக்க முயன்ற சுரங்கி கிராமத்தை சேர்ந்த ரசிகர்கள் 3 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை கேள்விப்பட்டதும், கோவாவில் படப்பிடிப்பில் இருந்த யஷ், சுரங்கி கிராமத்துக்கு சென்றார். அங்கு மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரை பார்த்து கண்ணீர் விட்டு ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் யஷ் கூறும்போது, “இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிடும் என்று கருதித்தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்து கோவாவுக்கு சென்றேன். ஆனாலும் விபத்தில் மூன்று ரசிகர்கள் மரணம் அடைந்தது வேதனையை ஏற்படுத்தியது. மரணம் அடைந்த இளைஞர்கள் குடும்பத்துக்கு ஒரு மகன் பொறுப்பில் இருந்து வாழ்நாள் முழுவதும் தேவையான அனைத்தையும் செய்வேன்.
ரசிகர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருங்கள். எங்களைப் பற்றி யோசிக்காதீர்கள். பெற்றோரை பற்றி சிந்தியுங்கள். இனிமேலாவது இதுபோல் கட் அவுட், பேனர் வைப்பதை கைவிடுங்கள். கடந்த வருடமும் எனது பிறந்த நாளில் அசம்பாவிதங்கள் நடந்தன. இதையெல்லாம் பார்க்கும்போது எனது பிறந்த நாள் என்றாலே எனக்கு பயமாக இருக்கிறது'' என்றார்.