நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ரஜினிகாந்த் தற்போது 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். போலீ என்கவுண்டர் பற்றிய படமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
திருவனந்தபுரத்தில் தொடங்கி மும்பை, சென்னை, திருநெல்வெலி, நாகர்கோவில், உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது கன்னியாகுமரியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி சென்ற ரஜினிகாந்த், விஜயகாந்த் மரணத்தால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பி விட்டார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த், பகத் பாசிலுடன் நடிக்கும் காட்சிகள் லீக் ஆகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். படக்காட்சிகள் வெளியாகாமல் இருக்க செல்போனுக்கு தடை விதித்துள்ளனர். வெளியாட்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் பாதுகாப்பையும் மீறி கன்னியாகுமரியில் ரஜினிகாந்த், பகத் பாசில் ஆகியோர் பங்கேற்று நடித்த காட்சி இணைய தளத்தில் கசிந்துள்ளது. படக்காட்சியை கசிய விட்டது யார் என்று விசாரணை நடக்கிறது.