மலையாளத்தில் கதிர் நடிக்கும் 'மீச' திரைப்படம் விரைவில் துவக்கம் | மம்முட்டியுடனான அரசியல் படம் நிறுத்தம் : பிரித்விராஜ் வெளிப்படையாக அறிவிப்பு | ‛வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி | மே 31ல் கருடன் ரிலீஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 'தி கோட்' - போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பம் | கமெண்ட் ஆப் செய்து பதிவிட்ட ஜிவி பிரகாஷ் | மூன்றாவது முறையாக டிராப் ஆன 'குற்றப்பரம்பரை' | 'விஜய்' வரிசையில் அடுத்த நாயகன் விஜய் கனிஷ்கா | நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு | ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ |
பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, பரிணிதி சோப்ரா ஆகியோரின் நெருங்கிய உறவினர் மீரா சோப்ரா. எஸ்.ஜே.சூர்யாவின் 'அன்பே ஆருயிரே' படம் மூலம் நிலா என்ற பெயரில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உட்பட சில படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் போதிய வாய்ப்புகள் இன்றி பாலிவுட்டுக்கு சென்று மீரா சோப்ரா என்ற தனது உண்மையான பெயரில் நடித்து வருகிறார். ஆனாலும் அங்கும் ஒரு சில படங்களில்தான் நடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது “ஹிந்தி சினிமா துறையில் கடந்த 9 வருடங்களாக இருக்கிறேன். ஆனால் எண்ணி நான்கு படங்கள் மட்டுமே நடித்திருக்கிறேன். எனக்கு இன்னும் பல கதாபாத்திரங்கள் கிடைக்க வேண்டும். நான் நடித்த 'சாபத்' படத்தில் என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காண்பித்தேன். அதுபோன்ற கதைகள் எனக்குக் கிடைக்க வேண்டும்.
எனது உறவினர்கள் பிரியங்கா சோப்ரா, பரிணிதி சோப்ரா முன்னணி நடிகைகளாக இருக்கிறார்கள். அதற்காக தொழில்ரீதியாக எங்களின் குடும்ப தொடர்பை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அது நான் எடுத்த முடிவு. அதற்காக, 'இவர் என் சகோதரி, இவருக்கு வாய்ப்புக் கொடுங்கள்' என்று அவர்களும் சொல்வதில்லை. அதை நான் விரும்பவும் இல்லை” என்கிறார்.