அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், திடீரென பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதாக அறிவித்தனர். பொங்கலுக்கு வருகிறோம் என ஏற்கெனவே, 'அயலான், அரண்மனை 4, லால் சலாம்' ஆகிய படங்களை அறிவித்திருந்தார்கள்.
அந்தப் படங்களுக்கே தியேட்டர்களை பிரித்துக் கொடுப்பதில் தடுமாற்றம் நிலவி வரும் சூழலில் தற்போது 'கேப்டன் மில்லர்' படமும் அந்தப் போட்டியில் வந்துள்ளது. இது முன்னர் அறிவித்தவர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள். 'அயலான்' படத்தை ஏற்கெனவே தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்து பின் பொங்கலுக்குத் தள்ளி வைத்தார்கள். அப்படம் கடந்த சில வருடங்களாக படமாக்கப்பட்டு இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' படம் பொங்கலுக்கு வராது, தள்ளிப் போகலாம் என ஒரு தகவல் வெளியானதால்தான் 'கேப்டன் மில்லர்' படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்தார்களாம். ஆனால், அன்றைய தினத்தில் படம் வந்தே ஆக வேண்டும் என ஐஸ்வர்யா முடிவெடுத்து வேலைகளை முடுக்கி விட்டாராம். அதனால்தான், டீசர் பற்றிய அறிவிப்பும் வெளியாகியது என்கிறார்கள்.
இப்போது நான்கு படங்கள் போட்டியிட உள்ள சூழலில் எந்தப் படமாவது வெளியீடு தள்ளிப் போகுமா என்பது இனிமேல்தான் தெரியும்.