மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு |
மீசைய முறுக்கு, கோடியில் ஒருவன், திருவின் குரல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆத்மிகா. சமீபகாலமாக ஆன்மிகத்திலும், சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் ஆத்மிகா, சமீபத்தில் இமயமலையில் உள்ள பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்திருக்கிறார்.
அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் ஆத்மிகா, ‛‛எனக்கு தெய்வீக அழைப்பு ஒன்று வந்த போது அங்கு பயணித்தேன். இந்த பயணம் கடினமாகவும் மரண அனுபவத்தை எதிர்கொள்ளும் பயணமாகவும் இருந்தது. என்றாலும் பாபாஜியின் குகையில் நுழைந்து தியானத்துக்கு உட்கார்ந்த போது அது ஆழமானதாக இருந்தது. என்னுடைய வாழ்நாளில் இதுபோன்ற சக்தியை நான் அனுபவித்ததில்லை. இந்த தியானத்திற்கு பிறகு நிபந்தனையின்றி பாபாஜியை குருவாக ஏற்றுக் கொண்டேன். உலகில் உள்ள எந்த ஒரு மனிதரும் தங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது பாபாஜியின் குகைக்கு சென்று தியானம் செய்து அதை அனுபவிக்க வேண்டு''ம் என்று ஆத்மிகா அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.