விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு திரையுலகின் மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் மகனும் நடிகர் மகேஷ்பாபுவின் அண்ணனுமான நரேஷ் என்பவர் கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி முறையாக தன்னிடம் இருந்து விவாகரத்து பெறாமல் நரேஷ் நான்காவது திருமணம் செய்து கொண்டார் என வழக்கு தொடர்ந்து பரபரப்பை கூட்டினார். அந்த சமயத்தில் நரேஷ், பவித்ரா, லோகேஷ் இருவரும் இணைந்து நடித்த மல்லி பெல்லி திரைப்படம் வெளியானது. இந்த படம் அவர்களது நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக உருவாகி இருந்தது.
படம் ரிலீஸ் ஆனபோது பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் கூட இந்த திருமண சர்ச்சை காரணமாக இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானபோது ஓரளவு வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்தில் தன்னை மிகவும் மோசமாக சித்தரித்து உள்ளதாக கூறி இந்த படத்தை ஓடிடி தளத்திலிருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நரேஷின் மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதி. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின்படி தற்போது ஓடிடி தளத்தில் இருந்து மல்லி பெல்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.