தக் லைப்பில் அதிரடி நடனத்திற்கு தயாராகும் த்ரிஷா | குணா பாடலுக்கு முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம் : மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம் | நான் சிங்கிள், மிங்கிளாக விரும்பவில்லை : ஸ்ருதிஹாசன் | பாராசூட்டில் பறந்த கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி! | அபுதாபியில் பிரதமர் மோடி திறந்து வைத்த கோயிலுக்கு சென்ற ரஜினி | 100ஐத் தொட்டது 2024 தமிழ்ப் படங்கள் ரிலீஸ் | சூர்யா 44 படப்பிடிப்பு ஜுன் முதல் ஆரம்பம் | மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்த ஸ்ரீதேவி | கழுத்தில் தாலியுடன் ஆர்த்தி சுபாஷ் : ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றம் | அரசியல் பிரபலத்துடன் திருமணமா? - ரேகா நாயர் ஓபன் டாக் |
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்த வடிவேலு தற்போது நடித்துள்ள மாமன்னன் படத்தில் முற்றிலும் ஒரு மாறுபட்ட நடிகராக தன்னை திரையில் வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் காரணமாக அவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‛மாரி செல்வராஜின் கலை பயணத்தில் மற்றொரு அற்புதமான படைப்பு மாமன்னன். வடிவேலு எனும் மகா கலைஞனின் இத்தனை ஆண்டு கால திரை பயணத்துக்கான பரிசாக மாமன்னனுக்காக அவருக்கு தேசிய விருது கொடுப்பதே சிறந்த கவுரவமாக அமையும். முகபாவணையில் மீட்டர் கொஞ்சம் ஏறி இறங்கி இருந்தாலும் அவருடைய காமெடி காட்சிகளையும் நினைவூட்டி விடும் அபாயம் இருந்தாலும் தனது அபார நடிப்பால் திரையில் முற்றிலுமாக புது பரிமாணத்தை எட்டி இருக்கும் வடிவேலு சார், இந்த நூற்றாண்டு கண்ட ஆகச்சிறந்த கலைஞர்களில் ஒருவர் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
அதேபோல் உதய் சார் கேரியரில் இதுவே உச்சம். நிஜ வாழ்வில் ஒரு அரசியல் ஆளுமையாக இருந்த போதிலும், ஒரு இயக்குனர் தனக்கான அரசியலை பேச முழு சுதந்திரம் கொடுத்ததோடு, இந்த மாபெரும் படைப்பு உருவாக பக்கபலமாக துணை நின்றதில் அவரது நேர்மை வெளிப்படுகிறது என்று கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.