22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
மிமிக்ரி கலைஞரான கோவை குணா அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மிகவும் புகழ்பெற்ற குணா, திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், அவரது இறப்புக்கு காரணம் அவரிடமிருந்த தவறான பழக்க வழக்கங்கள் தான் என சிலர் பேசி வந்தனர்.
இதுகுறித்து கருத்துகூறியுள்ள மதுரை முத்து, 'பண்முக கலைஞர் என்றாலே அது கோவை குணா மட்டும் தான். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தன்னுடன் இருக்கும் கலைஞர்களை போட்டியாக கருதமாட்டார். சிலர் குணாவிற்கு இருந்த கெட்ட பழக்கத்தால் அவர் இறந்துவிட்டார் என்று கூறுகின்றனர். அது ரொம்ப தவறான ஒன்று. அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறதே தவிர, கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை. பல குரல் கலைஞர்கள், பன்முகத் தன்மையில் விளங்கும் கலைஞர்களுக்கு கோவை குணா பெயரில் விருது வழங்க வேண்டும். அதுதான் அந்த விருதுக்கும் பெருமை, வாங்குபவர்களுக்கும் பெருமை. விரைவில் குணாவுக்காக நடைபெறவுள்ள கண்ணீர் அஞ்சலி கூட்டத்தில், கோவை குணா பெயரில் விருது வழங்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறோம்' என்று மதுரை முத்து கூறியுள்ளார்.