ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

மிமிக்ரி கலைஞரான கோவை குணா அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கலக்கப் போவது யாரு, அசத்தப் போவது யாரு ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மிகவும் புகழ்பெற்ற குணா, திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், அவரது இறப்புக்கு காரணம் அவரிடமிருந்த தவறான பழக்க வழக்கங்கள் தான் என சிலர் பேசி வந்தனர்.
இதுகுறித்து கருத்துகூறியுள்ள மதுரை முத்து, 'பண்முக கலைஞர் என்றாலே அது கோவை குணா மட்டும் தான். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தன்னுடன் இருக்கும் கலைஞர்களை போட்டியாக கருதமாட்டார். சிலர் குணாவிற்கு இருந்த கெட்ட பழக்கத்தால் அவர் இறந்துவிட்டார் என்று கூறுகின்றனர். அது ரொம்ப தவறான ஒன்று. அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறதே தவிர, கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை. பல குரல் கலைஞர்கள், பன்முகத் தன்மையில் விளங்கும் கலைஞர்களுக்கு கோவை குணா பெயரில் விருது வழங்க வேண்டும். அதுதான் அந்த விருதுக்கும் பெருமை, வாங்குபவர்களுக்கும் பெருமை. விரைவில் குணாவுக்காக நடைபெறவுள்ள கண்ணீர் அஞ்சலி கூட்டத்தில், கோவை குணா பெயரில் விருது வழங்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறோம்' என்று மதுரை முத்து கூறியுள்ளார்.